இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரண சிந்தனை

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி  தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்)அவர்கள்  கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக்  கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம். திடீரென்று நபி (ஸல்)அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்கள். ஒருவன் உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் (சக்கராத்தின்) நேரத்தில் சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானிலிருந்து மலக்குகள் சிலர் அவரிடம் வருவார்கள். அவர்கள் சொர்க்கத்தின் கஃபன் துணியிலிருந்து ஒரு கஃபன் துணியையும் சொர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக்கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி நல்ல ஆத்ம...
مات ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ ﻣﻘﺘﻮﻻً وﻣﺎت ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ ﻣﻘﻄﻮﻉ ﺍﻟﺮأس وﻣﺎت الاﻣﺎﻡ ﺍﻟﺸﺎﻓﻌﻲ ﺑﺴﺒﺐ اﻟﻀﺮب الـعنيف ﺑﺎﻟﻬﺮاوات وﻣﺎت ﺳﻔﻴﺎﻥ ﺍﻟﺜﻮﺭﻱ فاراً وﻣﺎﺕ ﺍﻟﻄﺒﺮﻱ ﻣﺤﺎﺻﺮاً وﻣﺎﺕ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻣﻬﺠﻮﺭاً وﻣﺎﺕ ﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻣﻘﺘﻮﻻً وﻣﺎﺕ ﺍﺑﻦ ﺣﺰﻡ ﻣﻄﺎرداً وﻣﺎﺕ ﻋﻴﺎﺽ ﻣﺴﻤﻮﻣﺎً وﻣﺎت ﺷﻴﺦ ﺍﻹﺳﻼﻡ اﺑﻦ ﺗﻴﻤﻴﻪ ﻣﺴﺠﻮﻧﺎً. ومات نعيم بن حماد مقيدا وجر فى قيده وألقى فى حفره ولم يغسل ولم يصلى عليه هذا ﻫﻮ ﺣﺎﻝ ﺍﻟﻌﻠﻤﺎﺀ ﻳﺪﻓﻌﻮﻥ أعمارهم ﻣﻦ اﺟﻞ إﻳﺼﺎﻝ ﻛﻠﻤﺔ ﺍﻟﺤﻖ ﻭﺭﺳﺎﻻت اﻟﻠﻪ قال الله: ( الم ۝ أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ ۝ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ ۝ أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا سَاء مَا يَحْكُمُونَ ) حياة المؤمن ... لا تكون إلا بالإبتلاء .. ولا يكون للإبتلاء لذةً إلا بالصبر .. ولا يكون الصبر تاماً إلا بالرضا .. وأعلم ... ان الجنة عروس .... مهرها قهر النفوس . كلنا للجنة عشاق ... ومن منا ليس بمشتاق . فاعمل لها فإن طريقها شاق . والدنيا ثلاث : أمل ، وألم ، وأجر . فعش بالأولى وتحمل الثانية ل...
அஸ்ஸலாமு அலைக்கும் கண்ணியத்திற்குரிய பாகவி ஆலிம்களே, பாகப் பிரிவினை குறித்து அவ்வப்போது நம்முள் பலருக்குச் சந்தேகம் ஏற்படலாம். எளிய முறையில் பாகம் பிரித்துக் கொடுக்கும் வகையில் ஒரு செயலி (App) உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். கேட்போரின் கேள்விகளுக்கு எளிய முறையில் விடை சொல்லலாம். அதன் பெயர் الفرائض - அல் ஃபராயிள். اذكار المسلم  என்ற பெயரில் ஒரு App உள்ளது இதில் காலை மாலை ஓத வேண்டிய துவாக்கள் தொழுகைக்குபின் ஓத வேண்டிய துவாக்கள் தூங்கும் போது ஓதும் துவாக்கள் மேலும் நாம் நம்முடைய தினமும் ஓதும் அவ்ராதுகளை இனைத்து கொள்ள முடியும் அதுமட்டுமின்றி நாம் cell phone உபயோகிக்கும்போது இடையில் தஸ்பிஹாத்தை நினைவூட்டும் இது போன்று பயனுள்ள ஒரு App . https://play.google.com/store/apps/details?id=yasha.dikur அனைத்து மவ்லீது கிதாப் மற்றும் ராத்தீப் கிதாப்கள் உள்ள ஆப் https://play.google.com/store/apps/details?id=org.ah.holyqurandualpage.indopak 13 வரி குர்ஆன் ஆப் https://play.google.com/store/apps/details?id=com.almaany.arar arabic to arabic https://play.googl...

மரம் 🌲🌲🌲

தாவரங்களின் உலகம் 16  ( யூதர்களைக் காட்டிக் கொடுக்காத மரம் கர்காத் ) உலக மதங்களில் எல்லாம் மரங்கள் பற்றிய ஏதோ ஒரு குறிப்பு ஏதோ ஒரு இடத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். அம்மரத்தை அம்மதம் சார்ந்த மக்கள் தெய்வமாக வழிபடுவதும் உண்டு. எல்லாக் கடவுள்களுக்கும் ஏதோ ஒரு மரம் உகப்பானதாகவும், ஒவ்வொரு கோயில்களிலும் அவை ஸ்தல விருட்சங்களாகவும் நிறுவி நிற்பதை வைத்து அந்த கடவுளுக்கு அந்த மரம் உகந்தது என அறிந்து கொள்ளலாம் . சிவனுக்கு வில்வம், மாரியம்மனுக்கு வேம்பு ,புத்தருக்கு அரசமரம் கிறிஸ்தவருக்கு ஓக் , சிடார், ஈச்சம் எல்ம் உட்பட ஐந்து மரங்கள். முஸ்லீம்களுக்கு பேரீத்த மரம் என தகுதி தகுதியாக சிலர் தங்களது புனித மரங்களாக சிலவற்றை வரையறை செய்துள்ளனர். முஸ்லிம்களைப் பொருத்தவரை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஒட்டக இறைச்சி கூட சிறந்த உணவு என கூறவில்லை. ஆனால் பேரீத்தம் பழத்தைதான் ஆகச் சிறந்த உணவாக கூறியுள்ளார்கள்.  அது முஸ்லிம்களின் புனித மரம் ஒன்றும் அல்ல ; அவர்களது நாட்டில் மிதமிஞ்சிய வெப்பத்தை தாங்கி நின்று வளரும் மரம் வறட்சியிலும் பழுத்துக் குலுங்கும் மரம். வேறு எந்த உணவு கிடைக்காவிட்டாலும் பத்...

இன்சூரன்ஸ் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன

கேள்வி : *இன்சூரன்ஸ் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?* *எவ்வகையான இன்சூரன்ஸிற்கு அனுமதி உண்டு?* *இன்சூரன்ஸ் கம்பெனிகளில் வேலை பார்ப்பதின் சட்டம் என்ன?* *الجواب بعون الله الملك الوهاب 👇* انشورنس /بیمہ کے جتنے مروجہ طریقے ہیں  وہ  سود  اور  قمار  (جوا)  کا  مرکب  ہیں   اور  سود  اور  قمار کا لین دین  شریعتِ  مطہرہ  میں  بنصِ  قرآنی حرام ہے،  لہٰذا کسی بھی شخص کے لیے کسی بھی انشورنس کمپنی کے ساتھ کسی بھی قسم  کی (چاہے جانی ہو یا مالی ) انشورنس/ بیمہ  کا کوئی معاہدہ کرنا جائز نہیں ہے பொதுவாக இஸ்லாத்தின் பார்வையில் லைஃப் இன்சூரன்ஸ் (உயிர் காப்பீடு, வாகன காப்பீடு, சொத்து காப்பீடு, பொருள் காப்பீடு, மருத்துவ காப்பீடு) இவையல்லாம் கூடுமா?  ​ ஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும்  அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும்.  காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும் ஒ...

புனித குர்ஆனில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் 100 நேரடி அறிவுறுத்தல்கள் மனிதனுக்காக

புனித குர்ஆனில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் 100 நேரடி அறிவுறுத்தல்கள் மனிதனுக்காக !! 1. பேச்சில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் (3: 159) 2. கோபத்தைத் தடு (3: 134) 3. மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள் (4:36) 4. ஆணவம் கொள்ளாதே (7:13) 5. மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு மன்னிக்கவும் (7: 199) 6. மக்களிடம் லேசாக பேசுங்கள் (20:44) 7. உங்கள் குரலைக் குறைக்கவும் (31:19) 8. மற்றவர்களை கேலி செய்யாதீர்கள் (49:11) 9. பெற்றோரிடம் கடமையாக இருங்கள் (17:23) 10. பெற்றோருக்கு அவமரியாதை சொல்லாதீர்கள் (17:23) 11. அனுமதி கேட்காமல் பெற்றோரின் தனியார் அறைக்குள் நுழைய வேண்டாம் (24:58) 12. கடனை எழுதுங்கள் (2: 282) 13. யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம் (2: 170) 14. கடனாளர் கடினமாக இருந்தால் திருப்பிச் செலுத்த அதிக நேரம் ஒதுக்குங்கள் (2: 280) 15. வட்டி நுகர வேண்டாம் (2: 275) 16. லஞ்சத்தில் ஈடுபட வேண்டாம் (2: 188) 17. வாக்குறுதியை மீறாதீர்கள் (2: 177) 18. நம்பிக்கையை வைத்திருங்கள் (2: 283) 19. உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள் (2:42) 20. மக்களிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கவும் (4:58) 21. நீதிக்காக உறுதியாக ...

உடலின் மொழி

உடலின் மொழி ☯️☯️☯️☯️☯️☯️☯️☯️ . 1. உடல் - உணவை கேட்கும் மொழி – பசி . 2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி – தாகம் . 3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி . 4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல். . 5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – காய்ச்சல் . 6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை . 7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி . 8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – வாந்தி . 9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – பேதி . 10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – வியர்வை . 11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி – உறக்கம். . 12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிற...

வாதிடாதீர்

கழுதைகளுடன் வாதிடப்போகாதீர்கள் (கட்டுக்கதை) "DON'T ARGUE WITH DONKEYS (Fable) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கழுதையொன்று புலியிடம்,  "புல்லின் நிறம் நீலம்!"   என்று கூறியது. புலி கோபமடைந்து,  "இல்லை, புல் பச்சை!"   என்று கூறியது. விவாதம் சூடுபிடித்தது,  இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர்,  எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.  சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை,  "அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?"   என்று கேட்டது. சிங்கம்,  "உண்மை, புல் நீலநிறமானது"  என்று பதிலளித்தது.   கழுதை விரைந்து தொடர்ந்தது,  "புலி என்னுடன் உடன்படவில்லை••• முரண்படுகிறது•• அரசே•••! என்னை எரிச்சலூட்டுகிறது,  தயவுசெய்து அவரை தண்டியுங்கள்."   என்று கூறியது. அப்போது அரசர்,  "புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு  யாருடனும் பேசக்கூடாது,  மௌனமாகவே இருக்க வேண்டும்•••  இதுதான் உனக்குரிய தண்டனை"  என்று அறிவித்தது.  கழுதை மகிழ்ச்சி...

*ஐந்து விடயங்களின் மூலம் ஐந்து விடயங்களை அறிந்து கொள்ளலாம்.*

*தங்கத்தைவிட பெறுமதியான சில வரிகள்.*  *ஐந்து விடயங்களின் மூலம் ஐந்து விடயங்களை அறிந்து கொள்ளலாம்.* ● மரத்தை அதனுடைய பழங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். ● ஒரு பெண்ணை அவளுடைய கணவன் ஏழ்மையாக இருக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம். ● கஷ்டமான சிரமமான சந்தர்ப்பத்தில் நண்பனை அறிந்துகொள்ளலாம். ● சோதனைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உண்மையான முஃமினை அறிந்து கொள்ளலாம். ● கடுமையான தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் உண்மையான கொடையாளியை அறிந்து கொள்ளலாம்.  *ஐந்து விடயங்கள் ஐந்து விடயங்களை உயர்த்துகின்றன.*  ● பணிவுத் தன்மை ஆலிம்களை உயர்த்துகின்றது.  ● பணம் இழிவானவர்களை உயர்த்துகின்றது. ● மௌனம் பேச்சில் ஏற்படும் சிக்கல்களை நீக்குகிறது.  ● வெட்கம் நற்குணத்தை உயர்த்துகிறது. ● சர்வசாதாரணமாக பழகுவது நடிப்பதை நீக்குகிறது.  *ஐந்து விடயங்கள் ஐந்து விடயங்களின் மூலம் உண்டாகின்றன* ● இஸ்திக்ஃfபார் செய்வது ரிஸ்க்கை கொண்டு வருகின்றது.  ●பார்வையைத் தாழ்த்திக் கொள்வது முகத் தோற்றத்தில் இருந்து ஒருவரின் குணத்தை அறியும் கலையை அளிக்கின்றது.  ●வெட்கம் நலவுகளை கொண்டுவருகின்றது. ● மென்மையாக பேசுவ...
பணமாக மாற்றப்படாத எந்த திறமையும் இங்கு மதிக்கப்படுவதில்லை...

மனைவியை நேசிக்கிறாயா

மனைவியை நேசிக்கிறாயா? அவளிடம் கேள்;  அவளைப் பற்றிக் கேட்காதே! கண்டிப்பு செய்; அவளைத் தண்டிக்காதே! அவளுக்கு வழிகாட்டு; கை கழுவாதே! அவளைப் புரிந்து கொள்; நிர்பந்திக்காதே! அவளை நம்பு; கண்காணிக்காதே! அவளுக்கான ஆணாக இரு; அவளுக்கெதிரான ஆணாக இராதே! அவளைக் கைவிடாத ஆணாக... அவருக்கெதிராக பொய் சொல்லாத ஆணாக... தன்னை நேசிப்பவளின் கரத்தை விட்டுவிடாத ஆணாக இரு! அவளுக்கான ஆணாக நீயிருந்தால், உனக்கவள் நான்கு பெண்களுக்குச் சமமாக இருப்பாள்!   وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا   "இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்;   ...தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)." (அல்குர்ஆன் : 2:177) #குர்ஆன் #குடும்பவியல்

*பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.?*

*பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.?*     *அய்யம் பேட்டை* *மௌலானா மௌலவி அல்ஹாஜ்*  *B.M.ஜியாவுத்தீன் பாகவி ஹழ்ரத்*       *ஒரு இமாம் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான ஷர்த்துகள்..!* *1. ஆரம்பத்தில் இருந்தே நாம் நம்மை கட்டுப்பாடுகள் நிறைந்தவராக ஆக்கி கொள்ள வேண்டும்.* *2. தொழுகைக்கு பள்ளிக்குள் வரும் முதல் நபராக இமாம் இருக்க வேண்டும்*. *3. தொழுகைக்கு பின் பள்ளிக்குள்லிருந்து வெளியாகும் கடைசி நபராக இமாம் இருக்க வேண்டும். (முன் பின் சுன்னத் தொழுகையை நிறைவேற்றுதல்)* *4. பள்ளிக்குள் உலக விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும் பழக்கம் அறவே ஒழிக்க வேண்டும். குறிப்பாக பாங்கு சொன்ன பிறகு!* *5. நிறைவாக தாடிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது நமக்கு وقارة த்தை தரும்.*   *6. இமாமத் செய்யும் போதாவது தூய வெண்மை ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். சஜ்தா செய்யும்போது உள்ளாடையின் அளவு தெரியாத விதத்தில் ஆடைகள் அமைய வேண்டும். ஜுப்பா, அபா போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு தொழ வைப்பது இறையச்சத்தை அதிகப்படுத்தும்*. *7. எவ்வளவு பழகினாலும் அவர்களின் வாழ்க்கை, குடு...

காய்ச்சல் நீங்க

காய்ச்சல் நீங்க             اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الكبير اعوذ بالله العظيم من شر كل عرق نعار ومن شر حر النار என்று ஓதி ஊதி னாலும் அல்லது தனக்குத் தானே ஓதி ஊதி கொண்டாலும் காய்ச்சல் நீங்கி விடும் என்று மிஷ்காத் கிதாபில் வருகிறது

யார் ஷஹீத்?

யார் தனது பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார். மேலும் யார் தனது மார்க்கத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிராறோ அவர் ஷஹீதாவார். யார் தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்… என்ற நபியவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதி) அதே போல எந்தெந்த நிலையில் உள்ளவர்கள் ஷஹீதுடைய நிலைக்கு ஆளாவார்கள் என்பதை பின் வரும் ஹதீஸ் மூலம் அறியலாம். கொள்ளை நோயினால் மரணித்தவர் ஷஹீதாவார். வயிற்றோற்ற நோயினால் மரணித்தவர் ஷஹீதாவார். நீரில் மூழ்கி மரணிப்பவர் ஷஹீதாவார். நெருப்பில் சிக்கி மரணித்தவர் ஷஹீதாவார். கட்டட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணித்தவர் ஷஹீதாவார். (அபூதாவூத், நஸாயி

புத்தக கிராமம்

புத்தகங்களை பரிமாறிக் கொள்..!! "உலக வரைபடத்தில் உள்ள மூலை முடுக்குகளுக்கு செல்ல விரும்புகிறாயா..? ஒரு நூலகத்திற்குச் செல்.." என்ற டெஸ்கார்டஸின் வரிகள் நமக்குப் பரிச்சயமானவை.. ஆனால் அப்படி மூலை முடுக்குகளுக்குப் பயணிக்கும்போதும் நூலகங்கள் நமதருகே இருந்தால்..? ..கேட்கவே சுவாரசியமாக இருக்கிறதல்லவா..? சில வருடங்களுக்கு முன், புத்தகங்களைப் பற்றி முகநூலில் இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, அமெரிக்காவில் வசிக்கும் தோழி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, "Reading on the Highways" என தலைப்பிட்டிருந்தார்.. ..பயணங்களுக்கிடையே சிறிது நேரம் இளைப்பாரும் போது, பயணிகளை, முக்கியமாக இளைஞர்களைப் படிக்கத் தூண்டுவதற்காக அமெரிக்காவின் பல மாகாணங்களில், பார்க் அல்லது சோலைகளுக்கிடையே சிறிய நூலகங்கள் அமைப்பட்டிருந்ததைக் அதில் குறிப்பிட்டிருந்தார்.. இதைத் தெரிந்தவுடன், நண்பர் மீன்ஸ், "நம்ம ஊர்ல இதெல்லாம் சாத்தியமாகுமா..?  சந்தேகம் தான்.." என்ற தவிப்புடன் கூற, அன்றைய உரையாடல் அப்போது முடிவடைந்தது.. ஆனால் அதை இப்போது சாத்தியப் படுத்தியுள்ளனர், கேரள மாநிலத்தின் பெருங்குளம் கிராமத்தைச் சேர...

இரத்த தானமும்، ‏உடல் தானமும்*

*அ.கான் பாகவி ஹஜ்ரத் அவர்கள் கட்டுரை* *இரத்த தானமும்، உடல் தானமும்* அறிவியலின் அதீத முன்னேற்றத்தால், முற்காலத்தில் சாத்தியமில்லாமல் இருந்த கனவுகள் பல தற்காலத்தில் நனவுகளாகி உள்ளன. அவற்றில் மருத்துவத் துறையின் சாதனைகள் திகைக்கவைக்கின்றன. போன உயிரை மீட்க முடியவில்லையே தவிர, மற்றெல்லா ஊகங்களும் நிஜங்களாகிவருகின்றன. அதே நேரத்தில், சாதனைகளே சிலவேளைகளில் சோதனைகளாகி மனித இனத்தைச் சீரழிக்கவும் செய்கின்றன. ‘புதிய கண்டுபிடிப்புகள்’ என்று சொல்லி, மனித நாகரிகம், பண்பாடு, சமய மரபுகள், சமூக்க் கோட்பாடுகள் ஆகிய அனைத்துத் தார்மிக நெறிகளும் கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடுகின்றன. கடிவாளமில்லாத விலங்கு மட்டுமல்ல; கட்டுப்பாடில்லாத மனித ஆராய்ச்சியும் பேரழிவுதான். அணு ஆயுதங்கள், வேதிப்பொருட்கள், மின்னணுச் சாதனங்கள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றால் மனித குலம் அனுபவிக்கும் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம்; மதுவைப்போல். மருத்துவ ஆராய்ச்சி –குறிப்பாக அலோபதி சிகிச்சை முறை- என்பது உடனுக்குடன் பலன் தந்தாலும் அதன் பக்க விளைவுகள் நீண்ட காலத்திற்குப் பெரிய பாதிப்பையே தரவல்லவை. ஊசி மருந்துகள், மாத்திரைகள், ’டானிக்’க...

தஸவ்வுஃப்

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஸவ்வுஃப் எனும் சூஃபியிஸத்தைப் பற்றிக் கூறுகிறார்கள்: أصول طريق التصوف خمسة: தஸவ்வுஃப் எனும் தரீக்காக்களின் அடிப்படைகள் ஐந்து : تقوى الله في السر والعلانية. 1. ரகசியத்திலும், வெளிரங்கத்திலும் அல்லாஹ்வை பயப்படுவது, اتباع السنة في الأقوال والأفعال. 2. சொல்லிலும் செயலிலும் சுன்னாவைப் பின்பற்றுவதல், الإِعراض عن الخلق في الإِقبال والإِدبار. 3. மக்களை முன்னோக்கும் பொழுதும், தனித்து செல்லும்பொழுதும் படைப்பினங்களை (உள்ளத்தை விட்டும்) புறக்கணித்து விடுதல் (அல்லாஹ்வை மட்டும் முன்னோக்குதல்.) الرضى عن الله في القليل والكثير. 4. அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய (ரிஜ்கான)து குறைவாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும் அதை பொறுந்திக் கொள்ளுதல், الرجوع إِلى الله في السراء والضراء)  5. செழிப்பிலும், வறுமையிலும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பி இருத்தல். மகாஸிதுத் தஸவ்வுஃப், ஆசிரியர் : இமாம் நவவீ, பக்கம் : 20.
முன்னேற   விரும்பினால்... நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை   டிரைவர் தட்டி எழுப்பினார், சார் பின்னாடி போய் உட்காருங்க.   நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது" தூங்கி கொண்டிருந்த நண்பர்   பின்னால் உட்கார்ந்து, விட்ட   தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். டிரைவர் சொன்ன வார்த்தைகள்   ஆழ்ந்த விழிப்புணர்வு சொற்கள். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெல்ல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது   மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை   பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை.. எனவே முன்னேற விரும்பினால்   நீங்களும் "யோசியுங்கள்".... உங்கள் பக்கத்தில் இருப்பது "யார்..?" உற்சாகம...

கல்வி

قَالَ عَلِيٌّ : يَا طَالِبَ الْعِلْمِ «إِنَّ الْعِلْمَ ذُو فَضَائِلَ كَثِيرَةٍ، فَرَأْسُهُ التَّوَاضُعُ، وَعَيْنُهُ الْبَرَاءَةُ مِنَ الْحَسَدِ، وَأُذُنُهُ الْفَهْمُ، وَلِسَانُهُ الصِّدْقُ، وَحَفِظُهُ الْفَحْصُ، وَقَلْبُهُ حُسْنُ النِّيَّةِ، وَعَقْلُهُ مَعْرِفَةُ الْأَشْيَاءِ وَالْأُمُورِ الْوَاجِبَةِ، وَيَدُهُ الرَّحْمَةُ، وَرِجْلُهُ زِيَارَةُ الْعُلَمَاءِ، وَهِمَّتُهُ السَّلَامَةُ، وَحِكْمَتُهُ الْوَرَعُ، وَمُسْتَقَرُّهُ النَّجَاةُ، وَقَائِدُهُ الْعَافِيَةُ، وَمَرْكِبُهُ الْوَفَاءُ، وَسِلَاحُهُ لِينُ الْكَلِمَةِ، وَسَيْفُهُ الرِّضَى، وَقَوْسُهُ الْمُدَارَاةُ، وَجَيْشُهُ مُجَاوَرَةُ الْعُلَمَاءِ، وَمَالُهُ الْأَدَبُ، وَذَخِيرَتُهُ اجْتِنَابُ الذُّنُوبِ، وَزَادُهُ الْمَعْرُوفُ، وَمَاؤُهُ الْمُوَادَعَةُ، وَدَلِيلُهُ الْهُدَى، وَرَفِيقُهُ صُحْبَةُ الْأَخْيَارِ» _ الجامع لأخلاق الراوي وآداب السامع (1/ ص96)

ஸஃபர் மாதம் - ஒரு வரலாற்றுப் பார்வை*

*ஸஃபர் மாதம் - ஒரு வரலாற்றுப் பார்வை* *✍முனைவர் மௌலவி காஜா நிஜாமுதீன் யூஸுஃபி மேலை* *ஸஃபர் மாதம் தொடர்பாக மௌட்டீக காலம் முதற்கொண்டு பல மூடநம்பிக்கைகள் இருந்ததை வரலாற்றில் காண முடியும். ஸஃபர் அது வயிற்றுப் புழு. மனிதனுடைய வயிற்றில் இருந்து அவனை கொன்று விடுகிறது. அவனுக்குரிய மரண நேரம் வருவதற்கு முன்பே இறந்து விடுகிறான், என்று நம்பினர். ஸஃபர் மாதத்தையே பீடை மாதமாக கருதினர்.* (அவ்னுல் மஃபூத்) *ஸஃபர் மாதத்தை பீடை மாதமாக கருதப்பட்டது. மௌட்டீக காலத்தில் இந்த மாதத்திற்கு ஸஃபருல் கைர் - நல்ல ஸஃபர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் நல்லது என்று நம்பியதால் நல்லதாகவோ கெட்டது என்று நம்பியதால் கெட்டதாகவோ ஆகப்போவதில்லை, என்பதே நம்முடைய நம்பிக்கை. (அத்தியரா)*   *ஸஃபர் மாதம் முஹர்ரம் மாதத்திற்கு அடுத்து வருகிறது. முஹர்ரம் யுத்தம் ஹராமாக்கப்பட்ட மாதம். எனவே அதற்கு அடுத்து வரும் ஸஃபர் மாதத்தில் அதிமான யுத்தங்களும் குழப்பங்களும் நடக்கும் என்று நம்பினர்.* (நபிய்யுர் ரஹ்மா) *எனினும் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இஸ்லாத்தை மேலோங்கச் செய்யும் புரட்சிகரமான பல நிகழ்வுகளை வரலாறு நெடுகிலும் க...
*இஷ்கேஅவ்லியா*  *தொடர்=247*  🖲🖱🖱🖱🖱🖱🖱🖱🖱🖱 *நாய்களிடம்* *10-நற்குணங்* *களைகற்றுக்*  *கொள்ளுங்கள்*  *என்று சொன்ன*  *இறைநேசர்..!* 🖲🖱🖱🖱🖱🖱🖱🖱🖱🖱 ஒருநாள் மாபெரும்  இறைநேசர் ஹஸன்பஸரி (ரஹ்)  அவர்களிடம் "நாயைப் போய் பாராட்டுகிறீர்களே.. ஏன்..?" என ஒருமனிதர் கேட்டார். அதற்கு  இறைநேசர்அவர்கள்  அழகாக பதில் சொன்னார்கள். "நாயிடம் பத்து குணங்கள் இருக்கின்றன. அதனால் அதை புகழ்கிறேன்..!" என்றார்கள். *ஒன்று:-*  அது  பசித்திருக்கும்... "இது  நல்லோர்களின் செயல்..!" *இரண்டு:-*  அதற்கு எந்த  இடமும் நிரந்தரம் கிடையாது... "இது இறைநம்பிக்கையாளர்களின் நிலை..!" *மூன்று:-*  அது இரவில் சிறிதுநேரம் மட்டுமே  தூங்கும்... "இது இறை காதலர்களின்  நிலை..!" *நான்கு:-*  அது  எஜமான்அடித்தாலும் விரட்டினாலும் போகாது... "இது ஆன்மீகமாணவர் (முரீதீன்களின்) நற்குணம்..!" *ஐந்து:-*  அது  சாதாரண இடத்தில் தான் படுத்து  கிடக்கும்... "இது பணிவானவர்களின் குணம்..!" *ஆறு:-*  அது  தன்னுடையஇடத்தை யாரும் அபகரித்த...

உலக எழுத்தறிவு தினம்

இன்று செப்டம்பர் 8, அனைத்துலக எழுத்தறிவு தினம்  அறிவுடையார் எல்லாம் உடையார்...      அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்... அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். இதெல்லாம் எதற்கு இப்போது என யோசிக்கிறீர்களா? இன்று, (செப்-8) உலக எழுத்தறிவு தினம். எழுத்தறிவு தினம்.! ஐ.நா. அமைப்பின் அங்கமாகிய யுனிஸ்கோ எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் 1965-ம் ஆண்டு, முதன்முதலில் உலக எழுத்தறிவு தினத்தினை செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. அந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1966 செப்டம்பர் 8 முதல் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும் உணரவைப்பதே இந்தத் தினத்தின் நோக்கம். எழுத்தறிவின்மை.! ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று...
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *கதவை தட்டாத* *காரணத்தால்..* *எத்தனையோ வாய்ப்புகளை*  *இழக்க நேரிடுகிறது..!!* 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹  🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *தவறுகள்*  *அனுபவங்களை கொடுக்கும்..!*  *அனுபவங்கள்*  *தவறுகளை குறைக்கும்..!!* 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *எதையெதையோ யோசிப்பதற்கு*.. *இதெல்லாம் எதுவுமே இல்லையென கடந்துவிடுங்கள்*.. *எதுவும் அழகாகும்*...! 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 [: 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *எப்போ எல்லாம் வெற்றிக்கான சாவி கைகளில் கிடைக்கிறதோ*... *அப்பொழுதெல்லாம், யாராவது வந்து பூட்டை மாற்றி விடுகிறார்கள்*... " *இதுதான் வாழ்க்கை* "... 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹  🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *மனிதன் இறுதியாக இறப்பதற்கு முன்னால் மனதால் பல முறை இறந்து விடுகிறான்.. சிலநேரம் மனிதர்களால்.. சிலநேரம் மாற்றங்களால்*..!! 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 : 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *நாம் பேசுவது எப்போதேனும் சிலருக்கு தவறாக தோன்றினால் நம் வார்த்தையில் தவறு இருக்கலாம்* *ஆனால் நாம் பேசும் அனைத்தையும் சிலர் குற்றம்* *சொன்னால்*  *பிழை நம் வார்த்தையில்* *இல்லை*  *...