*இஷ்கேஅவ்லியா* 
*தொடர்=247* 

🖲🖱🖱🖱🖱🖱🖱🖱🖱🖱
*நாய்களிடம்*
*10-நற்குணங்*
*களைகற்றுக்* 
*கொள்ளுங்கள்* 
*என்று சொன்ன* 
*இறைநேசர்..!*
🖲🖱🖱🖱🖱🖱🖱🖱🖱🖱
ஒருநாள் மாபெரும் 
இறைநேசர்
ஹஸன்பஸரி (ரஹ்) 
அவர்களிடம்

"நாயைப் போய்
பாராட்டுகிறீர்களே..
ஏன்..?" என
ஒருமனிதர் கேட்டார்.

அதற்கு 
இறைநேசர்அவர்கள் 
அழகாக பதில்
சொன்னார்கள்.

"நாயிடம்
பத்து குணங்கள்
இருக்கின்றன.
அதனால் அதை
புகழ்கிறேன்..!"
என்றார்கள்.

*ஒன்று:-* 
அது 
பசித்திருக்கும்...

"இது 
நல்லோர்களின்
செயல்..!"

*இரண்டு:-* 
அதற்கு எந்த 
இடமும் நிரந்தரம்
கிடையாது...

"இது
இறைநம்பிக்கையாளர்களின்
நிலை..!"

*மூன்று:-* 
அது இரவில் சிறிதுநேரம் மட்டுமே 
தூங்கும்...

"இது
இறை காதலர்களின் 
நிலை..!"

*நான்கு:-* 
அது 
எஜமான்அடித்தாலும்
விரட்டினாலும்
போகாது...

"இது
ஆன்மீகமாணவர் (முரீதீன்களின்)
நற்குணம்..!"

*ஐந்து:-* 
அது 
சாதாரண இடத்தில்
தான் படுத்து 
கிடக்கும்...

"இது பணிவானவர்களின்
குணம்..!"

*ஆறு:-* 
அது 
தன்னுடையஇடத்தை
யாரும் அபகரித்தால்
வேறு இடத்திற்கு சென்றுவிடும்...

"இது இறைவனின் நாட்டத்தை பொருந்திக் கொண்டோரின்
சிறந்தகுணம்..!"

*ஏழு:-* 
அதை அடித்து 
விரட்டிய பின்
ரொட்டியைக் காட்டினால்
ஓடோடிவரும்...

"இது இறை
பக்தியாளர்களின் 
உயர்ந்த குணம்..!"

*எட்டு:-* 
அது 
உணவைப்பார்த்தால்
கொடுக்கும் வரை
காத்திருக்கும்...

"இது 
மிஸ்கீன்களின்
நல்லகுணம்..!"

*ஒன்பது:-*
அது
இறந்து விட்டால்
அதற்கு
எந்தப் பொருளும்
கிடையாது.!

"இது
துறவு மனப்பான்மை
உள்ளவர்களின்
நிலை.!"
 
*பத்து:-* 
அது 
ஓரிடத்தை விட்டு
சென்றுவிட்டால்
மீண்டும் அந்த இடத்திற்கு வராது...

"இது 
விசாலமான 
எண்ணம் கொண்ட நல்லோர்களின்
நற்குணம்..!" 

எனவே
இனி நாயைப்
கேவலமாகப்
பார்க்காதே...
அதன் உயர்ந்த நற்குணத்தைப்
பார்..!" என

ஆன்மீகமேதை
இறைநேசர் இமாம் *ஹஸன்பஸரி* 
(ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.
by
மவ்லவி
U.அபூதாஹிர் ஃபைஜி பாகவி
அல் மதீனா பள்ளிவாசல் கும்பகோணம் 
9443061063
Abuthahir faizee baqavi.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?