ராத்தீப் சிறப்பு
எதிரிகளின் சூழ்ச்சிகள் நம்மை தாக்காமல் இருக்கவும் இறைவனின் பாதுகாப்பு கிடைக்கவும் ஓத வேண்டியது
(ரஹ்மான் அர்ஹமர்ராஹிமீன் சிறப்பு)
روي أن زيد بن حارثة خرج مع منافق من مكة إلى الطائف فبلغا خربة فقال المنافق ندخل ههنا ونستريح ، فدخلا ونام زيد فأوثق المنافق زيداً وأراد قتله ، فقال زيد : لم تقتلني؟ قال : لأن محمداً يحبك وأنا أبغضه ، فقال زيد : يا رحمن أغثني ، فسمع المنافق صوتاً يقول : ويحك لا تقتله ، فخرج من الخربة ونظر فلم يرَ أحداً ، فرجع وأراد قتله فسمع صائحاً أقرب من الأول يقول : لا تقتله ، فنظر فلم يجد أحداً ، فرجع الثالثة وأراد قتله فسمع صوتاً قريباً يقول : لا تقتله ، فخرج فرأى فارساً معه رمح فضربه الفارس ضربة فقتله ، ودخل الخربة وحل وثاق زيد ، وقال له : أما تعرفني؟ أنا جبريل حين دعوت كنت في السماء السابعة فقال الله عزّ وجلّ : ( أدرك عبدي ) ، وفي الثانية كنت في السماء الدنيا ، وفي الثالثة بلغت إلى المنافق
நபி தோழர் ஜைது பின் ஹாரிஸா(ரலி) அவர்கள் ஒரு மனிதனுடன் பயணம் சென்றார்கள் அவன் நயவஞ்சகனாக இருந்தான் பயணத்தின் இடையில் பாலடைந்த கட்டிடத்தில் ஜைது(ரலி) தூங்கினார்கள் அப்பொழுது அந்த முனாபிக் அவர்களை கயிற்றால் கட்டினான் கண் விழித்த ஜைது(ரலி) அவனிடம் ஏன் இவ்வாறு செய்கின்றாய் என்று கேட்ட பொழுது அவன் சொன்னான் நீ முஹம்மதை(ஸல்) பிரியப்படக் கூடியவனாக இருக்கின்றாய் எனவே நான் உன்னை கொலை செய்யப் போகின்றேன் என்றான் அத்துடன் அவரை கொலை செய்ய முயன்ற போது அவர்கள் யாரஹ்மான் என்றோ அல்லது யாஅர்ஹமர் ராஹிமீன் என்றோ சொன்னார்கள்
ஒரு சப்தத்தை கேட்டான் வெளியே வந்து பார்த்தான் அங்கு யாரும் இல்லை எனவே அவரைக் கொல்ல இரண்டாவது முயற்சி மேற்கொண்டான் அப்பொழுது அதே குரல் முன்பை விட சற்று வேகமாக கேட்டது மீண்டும் வெளியே வந்து பார்த்தான் அங்கு யாரும் இல்லை மீண்டும் அவரை கொல்ல முயன்றான் ஜைது(ரலி) அவர்கள் அதே வார்த்தையைக் கொண்டு மீண்டும் அல்லாஹ்வை அழைத்தார்கள் அப்பொழுது அவரை கொல்லாதே என்று சப்தம் கேட்டது வெளியே வந்து பார்த்தான் அங்கே ஈட்டியுடன் ஒருவர் நின்றார் அவர் இந்த முனாபிக்கை கொலை செய்து விட்டு ஜைது அவர்களை காப்பாற்றினார் அவர் சொன்னார் நான் வானவர் ஜிப்ரீல் என்றும் உம்மை காப்பாற்ற அல்லாஹ் தன்னை அனுப்பிவைத்ததாகவும் சொன்னார்..
நூல். தப்ஸீர் ராஸி. சூரத்துல் பாத்திஹா விளக்கத்தில்.
(யாஹன்னான் யாமன்னான் சிறப்பு)
وأخرج الحكيم الترمذي عن جابر بن عبد الله رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « قال لي جبريل عليه السلام : يا محمد إن الله يخاطبني يوم القيامة ، فيقول : يا جبريل ما لي أرى فلان ابن فلان في صفوف أهل النار؟ فأقول يا رب إنا لم نجد له حسنة يعود عليه خيرها اليوم . فيقول الله : إني سمعته في دار الدنيا يقول : يا حنان يا منان ، فأته فاسأله فيقول وهل من حنان ومنان غيري؟ فآخذ بيده من صفوف أهل النار ، فادخله في صفوف أهل الجنة
ஒரு நாள் வானவர் ஜிப்ரீல்(அலை) நபியிடம் வருகை தந்து நாளை மறுமையில் நடக்கயிருக்கும் ஒரு சம்பவத்தை இவ்வாறு கூறினார்கள்.
நபியே மறுமையில் நரகவாசிகளின் அணியில் நிற்கும் ஒரு மனிதனை சுட்டிகாட்டி அல்லாஹ் என்னிடம் ஜிப்ரீலே இந்த மனிதனை நான் இங்கு பார்க்க என்ன காரணம் . அப்போது நான் சொல்வேன் இந்த நாளில் இவன் பக்கம் திரும்பி காப்பாற்றக்கூடிய எந்த நன்மையான விஷயத்தையும் நான் காணவில்லைஎன்று.
அப்போது அல்லாஹ் சொன்னான். யா ஹன்னான் யா மன்னான் என்ற திக்ரை சொன்னதை நான் கேட்டிருக்கின்றேன் அவன் சொர்க்கம் போக அந்த ஒன்று போதும் எனவே சொர்க்கம் அழைத்துச் செல்லுங்கள் என்பான் அந்த மனிதனின் கரம் பற்றிக் கொண்டு சொர்க்கத்தில் கொண்டு போய் நான் சேர்ப்பேன் என்று சொன்னார்கள்..
நூல். திர்மிதி
கருத்துகள்
கருத்துரையிடுக