நபிகளாரின் துஆ
*அல்ஹம்து லில்லாஹ்!*
*பெருமானார் நபிﷺ அவர்களின் பிரார்த்தனை.*
*اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ*
இரட்சகனே! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய்.
உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே.
உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன்.
உனது வாக்குறுதி மெய்யானது.
உன் சொல் மெய்யானது.
உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது.
யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மது صلي الله عليه وسلم ம் மெய்யானவர்.
இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன்.
உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன்.
உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும்,
நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக.
நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (ஸஹீஹ் அல்-புகாரி 7385 )
என்னைப் படைத்து பாதுகாத்து பரிபாலித்து வருபவனே!
எனது காரியத்தை இலகுவாக்கிய உனக்கே நன்றியும் புகழ்ச்சியும்.
எங்களின் நோய்களை முழுமையாக குணப்படுத்துவாயாக!
உனது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் வண்ணம் நல்ல உடல் ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக!
*ஆமீன்.*
கருத்துகள்
கருத்துரையிடுக