நற்பண்புகள்
நற்பண்புகள்...!!!
கண்ணுக்கு கருணை வேண்டும்
காதுக்கு கேள்வி வேண்டும்
நாவுக்கு அடக்கம் வேண்டும்
வாக்குக்கு உறுதி வேண்டும்
கிரிடத்துக்கு பணிவு வேண்டும்
கரத்துக்கு ஈகை வேண்டும்
இரைப்பைக்கு திருப்தி வேண்டும் .
இடைக்கு கற்பு வேண்டும்
சொல்லுக்கு இனிமை வேண்டும்
காலுக்கு கட்டுப்பாடு வேண்டும்
நடையிலே தெளிவு வேண்டும்
உடையிலே தூய்மை வேண்டும்
கழுத்துக்கு மாலை வேண்டும்
எண்ணத்தில் வாய்மை வேண்டும்
மனதுக்கு மாண்பு வேண்டும்
நெஞ்சுக்கு நேர்மை வேண்டும்
விரலுக்கு லயம் வேண்டும்
முகத்துக்கு புன்னகை வேண்டும்
முத்தத்துக்கு அழுத்தம் வேண்டும்
கதைக்கு கால் வேண்டும்
காதலுக்கு உண்மை வேண்டும்
கவிதைக்கு கருத்து வேண்டும் .
ஆண்மைக்கு உழைப்பு வேண்டும்
பெண்மைக்கு பொறுமை வேண்டும்
இளமைக்கு துடிப்பு வேண்டும்
முதுமைக்கு அமைதி வேண்டும்
ஆசிரியனுக்கு அன்பு வேண்டும்
மாணவனுக்கு ஆர்வம் வேண்டும்
வீரனுக்கு விவேகம் வேண்டும்
தலைவனுக்கு நிதானம் வேண்டும்
அறிஞனுக்கு செயல் வேண்டும்
காமத்துக்கு கதவு வேண்டும்
கணவனுக்கு வருமானம் வேண்டும்
மணைவிக்கு சிக்கனம் வேண்டும்
இதயத்துக்கு ஈரம் வேண்டும்
அன்னைக்கு எல்லாம் வேண்டும்
தம்பிக்கு ஒற்றுமை வேண்டும்
அண்ணனுக்கு அரவணைப்பு வேண்டும்
தந்தைக்கு கன்டிப்பு வேண்டும்
மகனுக்கு கீழ்படிதல் வேண்டும்
மகளுக்கு பொருமை வேண்டும்
மாமியாருக்கு அன்பு வேண்டும்
மாமனாருக்கு ஆளுமை வேண்டும்
குழந்தைக்கு குதூகலம் வேண்டும்
எழுத்துக்கு உணர்வு வேண்டும்
உழைப்பவனுக்கு முணைப்பு வேண்டும்
மக்களுக்கு உணர்வு வேண்டும்
காவலருக்கு கண்ணியம் வேண்டும்
மருத்துவருக்கு இரக்கம் வேண்டும்
நீதிபதிக்கு தர்மம் வேண்டும்.
*ஆட்சியாளனுக்கு நீதி வேண்டும்.*
கருத்துகள்
கருத்துரையிடுக