மன அழுத்தம்

*மன அழுத்தங்களுக்கான காரணங்கள் ஆறு:*

*1.அதிகப்படியான யோசனை:*

எல்லாவற்றுக்கும் யோசனை. ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி.
ஏதாவது ஒன்று நடந்தால் ஏன் இப்படி நடக்கவில்லை என்று கேள்வி.
அப்படி நடந்தால் ஏன் இது இப்படி நடக்கவில்லை என்று அதிருப்தி. 

*2. தாமதமான தூக்கம்:*

எதையாவது வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அதை தன்னுடனே வைத்துக்கொண்டு தூக்கத்தை தள்ளி வைப்பது.
இல்லை, எனக்கு சீக்கிரம் தூக்கம் வராது என்ற தனக்கு தானே கொள்கை வைத்துக்கொள்வது வராது என்பதனை வர வைக்க வேண்டும். அதானே உன் வேலை. 

*3.கடந்த காலத்தை பிடித்து வைத்திருத்தல்:*

இறந்த காலம் இறந்துவிட்டது. எதிர்காலம் பிறக்கவேயில்லை.
நிகழ்காலம் தான் உண்மை. இப்போது இருப்பது தான் நிஜம்.
மற்றதெல்லாம் நிழல். உருண்டு பிரண்டாலும் கடந்த காலங்கள் உருப்பெற்று வராது. அழிந்துவிட்டது. 

*4.விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது:*

அவர் எனக்காக தான் அதை சொன்னார்.
அவள் என்னைத் தான் பேசுகிறாள்.
இப்படி அத்தனையும் உங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது.
முதுகுக்கு பின் பேசுபவர்களால் உங்களை துன்புறுத்த முடியாது.
ஏனெனில் அவர்கள் அங்கு மட்டும்தான் பேசுவார்கள். 

*5. எல்லா நேரத்திலும் புகார்:*

அனைத்துக்கும் கோபம் கொள்வது.
சிறு ஏமாற்றத்தை கூட தாங்காமல் அவரால், அவளால், அவர்களால் தான் என்று குற்றம் சொல்வது.
தன் மீதான பிழையை மறந்து அருகில் இருப்பவரிடம் பழியை சுமத்துவது. 

*6.அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கிறேன்:*

எவராலும் அனைவரையும் மகிழ்விக்க முடியாது.
சிலராவது உங்களை எதிர்த்தால்தான், குறை கூறினால்தான் வளரமுடியும். எவரையும் உங்களால் முழுமையாக திருப்திபடுத்த முடியவே முடியாது. 

*இந்த ஆறு‌ காரணங்களால் தான் மிக அதிகமான மன அழுத்தம் உண்டாகிறது*

*இதனை தடுக்க வழிகள் இல்லவே இல்லையா?*

 *இருக்கிறது.*

*வெளியிலிருந்து உங்களுக்கு யாராலும் அழுத்தத்தை தர முடியாது. அப்படி தந்தால் அனுமதிக்காதீர்கள்.*

*உங்களை கேட்டுத் தான் எதுவும் உள்ளே வரவேண்டும், வெளியிலும் செல்ல வேண்டும்.* 

*உங்களுக்கு நீங்கள் எஜமானர்களாக இருங்கள்.*

*மனங்களை ஆளுங்கள், மனிதர்களை அல்ல*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?