இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா..?*

*இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா..?*

*இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை முதலில் பார்த்த இந்தியன்?*


ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது.
முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான்
இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற
பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு
இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை
ஏற்ற நபர் யார் என்று தெரியுமா... ? 

சேர வம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா.
இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும்
தமிழகத்தின் தென் பகுதி வரை இருந்தது.

இவர் இஸ்லாத்தை ஏற்றது 6 ஆம்
நூற்றாண்டில்..அதாவது முகமது நபி (ஸல்)காலத்திலேயே மக்காவிற்கு சென்று இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இதில் மற்றுமொரு சுவாரசிய தகவல்
இவர் தமிழர் என்பதே.

அதுவும் இந்தியாவில்
இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் தமிழர்
என்பதே.

இந்தியாவில் இஸ்லாத்தை பரப்ப
மக்காவில் இருந்து திரும்பும் வழியில் உடல்
நல சுகவீனம் காரணமாக இறந்தார்.

இறக்கும் முன் மாலிக் பின் தீனார் என்ற
நபி தோழரிடம் தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும்
, தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில்
இஸ்லாத்தை பரப்ப உதவுமாறும்..மசூதி கட்ட
உதவுமாறும் தனது குடும்பத்திற்கு கடிதம்
எழுதினார்.

இதை ஏற்றுக்கொண்ட
இவரது குடும்பம் இஸ்லாத்தை பரப்ப
அனுமதியளித்ததோடு இந்தியாவின் முதல் மசூதி கிபி
612 ஆம் ஆண்டு கொடுங்கலூரில் (திருப்புறையார்-திருச்சூர்) கட்டப்பட்டது .
இந்த மசூதியின் பெயர் சேரமான் பள்ளி . இன்று வரை உள்ளது..சேரமான் மன்னரின் அடக்கஸ்தலம் ஓமன் நாட்டில்
உள்ளது. 

இந்த உண்மை தமிழர்களாகிய
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இஸ்லாம் ஒன்றும் தமிழர்களாகிய நமக்கு
வடக்கில் இருந்து வரவில்லை.

மாறாக வடக்கு
மக்கள் இஸ்லாத்தை ஏற்கும் முன்னமே
தமிழர்களாகிய நமது முன்னோர்கள்
இஸ்லாத்தை ஏற்றனர் என்பதே உண்மை.

வரலாறுகளை மாற்றியே பழக்கப்பட்டவர்கள் இந்த உண்மைகளை எப்படி
மக்கள் மன்றங்களில் கூறப் போகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?