*அஸ்ஸலாமு* *அலைக்கும் (வரஹ்)* 

*சுவர்க்கத்தின்* *பிரம்மாண்டகளும்* *அதன் அற்புதங்களும்* 
...........................................
*சுவர்க்கம் எப்படி* *இருக்கும் ?* *சுவர்க்கம் எந்தப் பெருளாள். படைக்கப்பட்டது*
*சுவர்கத்தில் எத்தனை*
*படித்தரங்கள்?*சுவர்க்கம் யாரை தேடும்?* *சுவர்கத்தில் தினமும்* *எப்படி* *இருப்போம்?* 


1. தாருல் ஜலால் ஒளியாலும் !

2. தாருல் ஸலாம் செம்மனியாலும் !

3. தாருல் கரார் பவளத்தாலும் !

4. ஜன்னத்துல் அத்ன் மரகதத்தாலும் !

5. ஜன்னத்துல் மஃவா பொன்னாலும் !

6. ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும் !

7. ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் முத்தாலும் !

8. ஜன்னத்துன் நயீம் வைடூரியத்தாலும்

 *சுவனம் படைக்கப்* *பட்டு இருக்கிறது !* 

     ஆதாரம் : திர்மதி

பத்து வகையான மனிதர்களை சுவனம்
தேடுகின்றன.

1. நள்ளிரவில் இரண்டு ரக அத் தொழுபவர் .

2 கோடைகாலத்தில் நோன்பு நோற்பவர் .

3. முதல் தக்பீரை ஜமாத்துடன் தவறவிடாதவர் .

4. இரவில் அதிக நேரம் தூங்காதவர் .

5. உண்மையை அன்றி வேறெ தனையும் பேசாதவர் .

6. தம் மனைவி மக்களிடம் இரக்கம் உடையவர் .

7. எப்பொழுதும் உளுவுடன் இருப்பவர்கள் .

8. மது அருந்தாமலும் ஹராமான செயல்களை செய்யதிருப்பவர் .

9. எப்பொழுதும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டிருப்பவர் .

10. பசித்தவனுக்கு உணவளிப்பவர் தாகமுள்ளவருக்கு தண்ணீர் புகட்டியவர்.
 
இவர்களை சுவனம் தேடுகின்றது .
   
சுவனம் செல்லாத பத்து பேர்கள் 

1. இரக்கம் இல்லாதவர் .

2. கோள் சொல்பவன் புறம் பேசுவபன் .

3. பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவன் .

4. தன் மனைவியைக் கூட்டிக்குடுப்பவன் .

5. மோசடி செய்வபன்.

6. இசைக்கறுவி இசைப்பவர் .

7. பிறர் கேட்கும் மன்னிபை ஏற்காதவர் .

8. ஆடை அநிந்த நிர்வானிகள் .

9. உலகில் மீது அதிகம் ஆசை உள்ளவன் .

10. தன் தாய் தந்தையரை துன்புறுத்துபவன்.
 
நூல்:முநப்பிஹாத்

முஹம்மது நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஆறு விஷயங்களைச் செய்வதாக எனக்கு உறுதி அளித்தால் நான் உங்களுக்கு சுவர்கத்தை பெற்றுத்தர உறுதியளிப்பேன்.

1. பேசினால் உன்மையே பேசுங்கள் .

2. வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்.

3. அமானிதத்தைப் பாதுகாத்து வாருங்கள்.

4. நாவையும் மர்ம உறுப்பையும், பாதுகாதுக் கொள்ளுங்கள்.

5. தீமையை விட்டும் உங்கள் பார்வைத் திருப்பிக்கொள்ளுங்கள்.

6. உங்கள் கரங்களை தீமையை விட்டும் தடுத்துக் கொள்ளுங்கள்.
  
நூல்:மிஷ்காம் பக்கம் 415

சுவர்கவாசிகளுக்கு அல்லாஹுத்தஆலா
சுவர்கம் நுழையும் மறுமையில் உலகம் ஒரு ரொட்டியாக மாறிவிடும் அதனை அல்லாஹுத்தஆலா தன் சக்திமிக்க கைகளால் சுவர்கவாசிகலுக்கு உணவளிப்பான். மீன் இறைச்சியும் மாட்டு இறைச்சியும் சுவனவாசிகளிக்கு கறியாக கொடுப்பான் அந்த மீனின் ஈரலை மட்டும் 80.000 பேர் புசிப்பார்கள் 

 நூல்:புகாரி முஸ்லிம்)

சுவனத்தினுல் போகும் முதல் கூட்டத்தினரின் உருவங்கள் முழுமதி போல் ஒளிரும்.

இரண்டாம் கூட்டத்தினரின் உருவம் வின்மீன் போன்று ஒளிரும்.

சுவனத்தில் எச்சில் மலம் சிறுநீர் தும்மல் இருமல் சளி நோய் நொடி எதுவும் கிடையாது.

சுவர்கத்தில் பாத்திரங்கள் வெள்ளியாலும் தங்கத்தாலும் இருக்கும் அங்கு தலை சீவும் சீப்பு தங்கமாகவும் அவர்களின் நறுமணப்புகை சந்தனக்கட்டை யாகவும் வியர்வை கஸ்தூரி மணமுள்ளதாகவும் இருக்கும்.   
நூல் : புகாரி,முஸ்லிம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவனவாசிகலுக்குப் பணிவிடை செய்ய அழகிய சிறுவர்கள் இருப்பார்கள் மேலும் அவர்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஹூருல் ஈன் எனும் கண்ணழகிகள் இருப்பார்கள். அவர்கள் ஆனிமுத்துக்களைப் போல் இருப்பார்கள். அந்த ஹூருல் ஈன்கள் இந்த உலகை எட்டிப்பார்த்தாள் இந்த பூமி வெளிச்சமாகவும் நறுமணமாகவும் ஆகிவிடும் அந்த ஹூருல் ஈன் பெண்களின் எச்சில் கடலில் பட்டால் கடல் தேனாக மாறிவிடும் சுவர்கத்தில் ஒவ்வெரு ஆணுக்கும் மானிடப்பெண்கள் 70 பேரும் ஹூருல் ஈன்கள் 30 பேரும் மனைவியாக்கி கொடுக்கப்படும்
    நூல்: திர்மதி

சுவர்கவாசிகள் வாரத்தில் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் தங்களின் உற்றார் உறவினர்களை சந்திப்பார்கள்.

1. பிள்ளைகள் சனிக்கிழமையன்று தங்கள் பெற்றோரைச் சந்திப்பார்கள்.

2.ஞாயிற்றுக் கிழமையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சந்திப்பார்கள்.

3. திங்கட்கிழமை யன்று மாணவர்கள் தங்கள் ஆசிரியர் களைச்சந்திப்பார்கள்.

4.செவ்வாய்கிழமை யன்று ஆசிரியர்கள் தங்கள் மாணவர் களைச்சந்திப்பார்கள்.

5.புதன்கிழமையன்று நபிமார்களை தனது உம்மத்தினர் சந்திப்பார்கள் .

6.வியாழன் அன்று உம்மத்தினரை நபிமார்கள் சந்திப்பார்கள்.

7.வெள்ளிக்கிழமை யில் சுவனவாசிகள் அனைவரும் தங்கள் இறைவனைச் சந்திப்பார்கள் 

என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?