**கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து* *இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த* *ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர்* , " *இது எவ்வளவு?" என்று கேட்டார்.*
*நம்பிக்கையுடன் இருந்தாலும்,* *கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று* *அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று* *அவன் பதிலளித்தான்* .
*இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த* *எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு* *என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.*
" *பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.*
*இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின்* *இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.*
" *அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.*
*ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப்* *புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற* *எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து* *செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.*
*அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு* *முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும்* *இல்லை.*
*அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும்* *இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப்* *பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.*
*அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே* *தெரியும் என்று முடித்தார்....*
*முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின்* *தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே,* *மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்...*
*கற்றவரை பின் தொடருங்கள்.. .*
*வாழ்வின் அர்த்தம் விளங்கும்.* ..
கருத்துகள்
கருத்துரையிடுக