துர்பாக்கியமும் இந்த மூன்றும் ஒன்று சேராது
மூன்று அம்சங்கள் இருந்தால் துர்ப்பாக்கியம் நேராது:
1- தாயாருக்கு நன்மை செய்தால்...
وبَرًّا بوالدتي ولم يجعلني جبارا شقيا
"என் தாயாருக்கு நன்மை செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) பெருமைக்காரனாக,
துர்பாக்கியசாலியாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)
2- பிரார்த்தனை செய்தால்...
ولم أكن بدعائك رب شقيا
என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. (19:4)
3- அல்குர்ஆனை ஓதினால்...
ما أنزلنا عليك الْقرآن لتشقى
(நபியே!) நீர் துர்ப்பாக்கியசாலியாக ஆவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை. (20:2)
யா அல்லாஹ்! எங்களை மேற்கண்ட மூன்று அம்சங்களை உடையவர்களாக்கு!
துர்பாக்கியம் ஏற்படுவதை விட்டும் எங்களை பாதுகாத்திடு!
கருத்துகள்
கருத்துரையிடுக