இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழும் மகான்கள்

*மறைந்தும் உடல் அழியா மகான்கள்* "பதின்மூன்று நூற்றாண்டுகளாக பழுதடையாமலிருந்த இரு புனித உடல்கள்..." பக்தாதிலிருந்து 40 மைல் தொலை தூரத்தில் ஹஸ்ரத் ஸல்மான் ஃபார்ஸி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இதன் காரணமாக அந்த ஊர் "ஸல்மான் பாக்" என்று அழைக்கப்படுகிறது. இதன் பழைய பெயர் "மதாயின்". இது ரொம்ப காலமாக ஈராக்கின் தலை நகரமாக இருந்து வந்துள்ளது. இங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலை தூரத்தில் நாயகத்தோழர்களான ஹஸ்ரத் ஹுதைபத்துல் யமான் (றழியல்லாஹு அன்ஹு) ஹஸ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (றழியல்லாஹு அன்ஹு) ஆகிய இரு ஸஹாபிகளின் கப்ருகள் உள்ளன. அருகே தஜ்லா நதி ஓடுகிறது. ஹஸ்ரத் ஹுதைபா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரில் தண்ணீர் புகுந்தது. ஹஸ்ரத் ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரிலும் அது வெளிப்பட்டது. இந்த நிலையில் முதலாம் ஷா ஃபைசல் மன்னர் மற்றும் ஈராக் தலைமை முஃப்தி (நீதிபதி) ஆகியோர் தனித்தனியாக கண்ட கனவில் மேற்படி இரு ஸஹாபாக்கள் தோன்றி "எங்களின் கப்ருகளை இடமாற்றுங்கள்" என்று கூறினார்கள். முஃப்தி சாஹிப் அவர்கள் கப்ரை தோண்டி புனித உடல்களை அங்க...

கட்டுரை எழுதுவது எப்படி

*கட்டுரைகள் எழுதுவது எப்படி?* *1.* கட்டுரையின் மையம் -focus- என்பதை எழுதத் தொடங்கும் முன்னரே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் கட்டுரை எழுதும் பணி ஒப்படைக்கப்படும் போது அதைக் குறித்துக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக இந்தித் திணிப்புப் பற்றிய கட்டுரையை பல்வேறு விதங்களில் எழுதலாம். இந்திப் போராட்டங்களின் வரலாற்றைப் பற்றி எழுதுவது ஒரு வகை. நாம் current affairs பத்திரிகை. அதில் வரலாற்றுக்கு முக்கியத்துவம் இல்லை. வரலாற்றுக் கட்டுரைகளாக வருமிடங்களைத் தவிர மற்ற இடங்களில் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். செய்தித் தாளிலிருந்து தலைவர்கள் அறிக்கைகளைத் தொகுத்து எழுதுவது ஒரு வகை. ஆனால் அது அரைத்த மாவு. இந்தத் திணிப்பின் காரணங்கள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மையப்படுத்தி எழுதுவதே சுவையும் பயனும் தரும். அப்படி எழுத விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சிந்தனையும் உழைப்பும் இல்லாமல் சிறந்தவை உருவாவதில்லை *2.* மையத்தைத் தீர்மானித்த பிறகு அதற்கான தரவுகளைத் திரட்ட வேண்டும். உதாரணத்திற்கு இந்திக் கட்டுரைக்கே வருவோம். அந்த ஆணையில் இடம் பெற்றுள...

ஜைனப் ரழி வரலாறு

நெகிழ்வூட்டகூடிய அறிவுரை!  மக்காவில் அபுல் ஆஸ் என்ற ஒரு மனிதர் இருந்தார். இவர் யார் என்றால் நபி ஸல் அவர்களின் மனைவி கதீஜா (ரழி) அவர்களின் உடன்பிறந்த சகோதரியின் மகன் தான் இந்த அபுல்ஆஸ். ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, நம்மை நம்பக்கூடிய வர்களிடத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த வரலாறு ஒரு மிகப்பெரிய சான்று.  கதீஜா (ரழி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் 6 குழந்தைகள் பிறந்தது. இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. காசிம், அப்துல்லாஹ் இரண்டும் பிறந்தவுடனே மரணித்து விட்டது . நான்கு பெண் குழந்தைகள் பிறந்தது. ஸைனப்,ருகையா, உம்மு குல்தும், பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு. பாத்திமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கணவர் அலி (ரழி) அவர்கள். ருகையா,உம்மு குல்தும் இருவரின் கணவர் உஸ்மான் (ரழி) அவர்கள். ருகையா மரணித்தவுடன் உம்மு குல்துமை மணம் முடித்து கொடுத்தார்கள். இந்த ஸைனப் இருக்கிறார்கள் அல்லவா! அவர்கள் தான் நபிக்கு பிறந்த மூத்த பெண் குழந்தை. அப்படியே கதீஜா (ரழி) அவர்களை மாதிரியே இருப்பார்கள். தோற்றங்கள் பண்புகள் அப்படியே கதீஜா (ரழி) அவர்கள்தான் என்று சொல்லப்படும்.  ஸைனப் (...

ஹஜ்

அஸ்ஸலாமு அலைக்கும்...!!!  🧳- 🎒- 🧳- 🎒- 🧳 சர்குலர் நம்பர் 19 (Srandard Baggage) அதாவது சீரான லக்கேஜ் பற்றி பல ஹாஜி மார் கள் பல சந்தேகங்களை கேட்டு இருந்தீர்கள்.  விரிவான விவரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம் .  1️⃣ இந்த ஆண்டு அனைத்து ஹாஜி மார்களுக்கு ஹஜ் கமிட்டியே இரண்டு சூட்கேஸ் மற்றும் பிளைட் கேபின் உள்ளே வைக்கும் ஒரு சிறிய கைப்பை வழங்கும் .  2️⃣ இதை த் தான் ஹாஜி மார் கொண்டு வர வேண்டும்.  3️⃣ இதை த் தவிர வேறு லக்கேஜ் களை கொண்டு வர அனுமதி இல்லை.  4️⃣ கவர் ஹெட் அதாவது உங்கள் குரூப் ல் உள்ள தலைமை ஹாஜி அவர்களின் முகவரிக்கு மேற்கூறிய சூட்கேஸ் அனுப்பி வைக்க ப்படும்.  5️⃣ இதற்காக ஹாஜி மார் கள் Www.hajcommittee.gov.in என்ற வெப்சைடில் உங்களுக்கு எந்த முகவரியில் சூட்கேஸ் அனுப்பி வைக்க வேண்டும் - - - என்று பதிவு செய்ய வேண்டும்.  6️⃣ எல்லா ஹாஜி களுக்கு ஒரே மாதிரியான சூட்கேஸ் கொடுப்பாதால் அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுமே - - - என்று சில ஹாஜி மார் கள் கேட்டனர்.  7️⃣ தாங்களுக்கு சூட்கேஸ் வீடு தேடி வந்த பின்னர் அதற்கு மேல் உறை (சூட்கேஸ் கவர் ) தாங்கள்...

சர்வதேச பிறை 2022

சந்தி சிரிக்கிற சர்வதேசப் பிறை ____________________________________ பிறை விவகாரத்தில் விஞ்ஞான வளர்ச்சிகளின் பின்னணியில் மாற்றம் தேவையா என்பது குறித்து 1960 களிலிருந்து தொடர்ந்து நடை பெற்ற ஆய்வுகளின் முடிவாக,  இமாம் நவவி  ரஹ் அவர்களின் கூற்றான லிகுல்லி பலதின் ருஹ்யதுஹு “ஒவ்வொரு ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கும் அது பார்க்கும் பிறையின் படியே முடிவு” என  அறிவிக்கப் பட்டது.  பிறை பார்த்து நோன்பை நோற்கவும் பெருநாளை தீர்மானிக்கவும் கூறிய பெருமானார் (ஸல்) அவர்களின் எதார்த்த அறிவுரையே இஸ்லாமின் முடிவான கருத்து என அப்போது அறிஞர்கள் உறுதிபட அறிவித்தார்கள்.  சர்வதேச பிறையோ,  கணக்கீடுகளின் படியான பிறையோ இஸ்லாமின் தேடலில் இல்லை என்பதும் காரண காரியங்களோடு தெளிவாகவே விவரிக்கப் பட்டிருக்கிறது.  உலக அளவில் ஒற்றுமை என்று சொல்லி ஊரளவில் பிரிந்து விட வேண்டாம் என்று சவுதியில் இருந்து எகிப்து வரை உள்ள சர்வதேச்முஃப்திகள் கொஞ்சாத குறையாக கோரிக்கை வைக்கிறார்கள்.  சவூதி அரசு இதைத்தான் பல ஆண்டுகளாக அதனிடம் விசாரிப்போருக்கு பதிலாகவும் கூறிவருகிறது. தேவையுடையோர் இப்போதும் கூட சவூ...