தமிழ்
நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான்.... கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வட கிழக்கு வட மேற்கு தென் கிழக்கு தென் மேற்கு திசையை எட்டாகப் பிரித்த தமிழன் இசையை ஏழாகக் கொடுத்தான்... ச ரி க ம ப த நி இசையை ஏழாக கொடுத்த தமிழன் சுவையை ஆறாக பிரித்தான்... இனிப்பு கசப்பு கார்ப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு சுவையை ஆறாக பிரித்த தமிழன் நிலத்தை ஐந்தாக பிரித்தான்... குறிஞ்சி (மலைப்பகுதி) முல்லை ( வனப்பகுதி) நெய்தல் ( கடல் பகுதி) மருதம் ( நீர் மற்றும் நிலம்) பாலை ( வறண்ட பகுதி) நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன் காற்றை நான்காக பிரித்தான்... தென்றல் வாடை கோடை கொண்டல் கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை காற்றை நான்காக பிரித்த தமிழன் மொழியை மூன்றாக பிரித்தான்... இயல் ( இயற் தமிழ் ) இசை ( இசைத்தமிழ்) நாடகம் ( நாடகத்தமிழ்) இம்மூன்றும் தமிழு...